மேலும்

கிழக்குக் கொள்கலன் முனையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு இல்லை

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை தனியார் துறையிடம் குத்தகைக்கு விடுவது அல்லது ஒப்படைப்பது குறித்து எந்தக் கொள்கை அல்லது நிர்வாக முடிவும் எடுக்கப்படவில்லை என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி குறித்து நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர், அரசிற்குச் சொந்தமான இந்த வசதியைத் தனியார்மயமாக்குவது குறித்த ஊகங்களை நிராகரித்தார்.

பாரம் தூக்கிகள் உள்ளிட்ட முக்கிய கொள்கலன் கையாளும் உபகரணங்கள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தாலும், நாட்டின் நிதி நிலைமை காரணமாக இந்த திட்டம் முன்னர் பின்னடைவுகளைச் சந்தித்தது.

2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக முன்பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, சில பாரம்தூக்கிகள் பெறப்படவில்லை – அதாவது, அவை அனைத்தும் பெறப்படவில்லை.

மீதமுள்ள உபகரணங்களுக்கான கொள்முதல் தற்போது முன்னேறி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *