மேலும்

செய்தியாளர்: Vanni

வவுனியாவில் பெரும் பதற்றம் – சிறிலங்கா காவல்துறையால் ஒருவர் பலி

வவுனியா-  கூமாங்குளம் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு  ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, நேற்றிரவு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

திரிவைச்சகுளத்தில் சிங்கள குடியேற்றத்துக்காக 300 ஏக்கர் காடுகள் அழிப்பு

வவுனியா வடக்கில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான திரிவைச்சகுளம் பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

ரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது பங்காளிக் கட்சியான ரெலோவும் முடிவு செய்துள்ளது.

வடக்கு, கிழக்குக்கு வெளிநாட்டு உதவியை பெற கொடை நாடுகளின் மாநாடு – சஜித் வாக்குறுதி

வடக்கையும், கிழக்கையும் அபிவிருத்தி செய்வதற்கான வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, கொடை நாடுகளின் இரண்டு மாநாடுகளை கூட்டப் போவதாக, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித்துக்கு ஆதரவளிக்க தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை தவறு செய்த தமிழர்கள் – குற்றம்சாட்டிய மகிந்த

தமிழ் மக்கள் கடந்தமுறை தவறு செய்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தமுறை அவ்வாறான தவறைச் செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டனப் பேரணி

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்த்தக் கேணியில் பௌத்த பிக்குவின்  சடலத்தை எரித்த சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டன பேரணி இடம்பெற்றது.

நீராவியடி ஆலயம் அருகே பிக்குவின் உடல் தகனம் – காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்த, பௌத்த பிக்குவின் சடலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

நீராவியடி ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலத்தை தகனம் செய்ய முயற்சி

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து, பௌத்த விகாரையை அமைத்த கொழும்பு மேதாலங்கார  கீர்த்தி தேரர் புற்றுநோயால் நேற்று மகரகம மருத்துவமனையில் மரணமானார்.

மதவாச்சியில் நள்ளிரவு விபத்து – யாழ். சென்ற மூவர் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சிற்றுந்துடன், பாரஊர்தி ஒன்று பக்கவாட்டில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.