மேலும்

செய்தியாளர்: Vanni

ரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது பங்காளிக் கட்சியான ரெலோவும் முடிவு செய்துள்ளது.

வடக்கு, கிழக்குக்கு வெளிநாட்டு உதவியை பெற கொடை நாடுகளின் மாநாடு – சஜித் வாக்குறுதி

வடக்கையும், கிழக்கையும் அபிவிருத்தி செய்வதற்கான வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, கொடை நாடுகளின் இரண்டு மாநாடுகளை கூட்டப் போவதாக, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித்துக்கு ஆதரவளிக்க தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை தவறு செய்த தமிழர்கள் – குற்றம்சாட்டிய மகிந்த

தமிழ் மக்கள் கடந்தமுறை தவறு செய்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டிய பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தமுறை அவ்வாறான தவறைச் செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டனப் பேரணி

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்த்தக் கேணியில் பௌத்த பிக்குவின்  சடலத்தை எரித்த சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டன பேரணி இடம்பெற்றது.

நீராவியடி ஆலயம் அருகே பிக்குவின் உடல் தகனம் – காற்றில் பறந்த நீதிமன்ற உத்தரவு

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்த, பௌத்த பிக்குவின் சடலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

நீராவியடி ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலத்தை தகனம் செய்ய முயற்சி

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து, பௌத்த விகாரையை அமைத்த கொழும்பு மேதாலங்கார  கீர்த்தி தேரர் புற்றுநோயால் நேற்று மகரகம மருத்துவமனையில் மரணமானார்.

மதவாச்சியில் நள்ளிரவு விபத்து – யாழ். சென்ற மூவர் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சிற்றுந்துடன், பாரஊர்தி ஒன்று பக்கவாட்டில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? – வட்டுவாகலில் கவனயீர்ப்புப் போராட்டம்

போரின் இறுதிக்கட்டத்தில்  சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று முல்லைத்தீவு – வட்டுவாகலில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர்.

திருக்கேதீச்சர வரவேற்பு வளைவு உடைப்பு – பரவலாக அதிருப்தி, கண்டனம்

மன்னார் – திருக்கேதீச்சர ஆலயத்துக்குச் செல்லும் வீதியின் முகப்பில் அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவு அகற்றப்பட்ட சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ள அதேவேளை, வரவேற்பு வளைவை மீண்டும் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.