மேலும்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல்- நான்காவது நபருக்கு பிடியாணை

மட்டக்களப்பில் 2008-ஆம் ஆண்டு ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் மற்றும் இரண்டு பேர் வரும் 15 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக கண்டறியப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு ஏழு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிஐடி பணிப்பாளராக ரொசான் அமரசிங்க நியமனம்

சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ரொசான் அமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார்.

பெலவத்தையில் ரில்வின் சில்வாவைச் சந்தித்தார் சீனாவின் புதிய தூதுவர்

சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்களின் மீது தொடங்கியது விசாரணை

22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 67 மனுக்கள் மீதான பரிசீலனையை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் 5 நீதியரசர்களைக் கொண்ட அமர்வு ஆரம்பித்துள்ளது.

சிறிலங்காவில் பணவீக்கம் 8%மாக அதிகரிப்பு

சிறிலங்காவில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) அடிப்படையிலான பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

சிறிலங்காவின் தேசிய வறுமைக் கோட்டு எல்லை ரூ. 17,679 ஆக அதிகரிப்பு

சிறிலங்காவின் தேசிய அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு, முந்தைய மாதத்தை விட 0.5% அதிகரித்து, ஜூலை மாதம்,  ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 17,679 ஆக உயர்ந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா படைகளுடனான பயிற்சி- மொன்டானா காவல்படை தளபதி விளக்கம்

சிறிலங்கா படைகளுடன் அட்லஸ் ஏஞ்சல் II என்ற ஐந்து நாள் கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்காவின் மொன்டானா தேசியக் காவல்படை அறிவித்துள்ளது.

பூட்டானில் சிறிலங்கா பிரதமருக்கு வரவேற்பு

பூட்டானைச் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் ஹரினி அமரசூரியாவை பாரோ அனைத்துவலக விமான நிலையத்தில், பூட்டான் பிரதமர் செரிங் டோப்கே வரவேற்றுள்ளார்.

22வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் உயர்நீதிமன்றில் இன்று விசாரணை

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கக் கோரும், அரசியலமைப்பின்  22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட  மனுக்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.