மேலும்

சிறிலங்காவின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல  சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் அலிசன் ஹூக்கர்

சிறிலங்கா வந்துள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர்  கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

முள்ளிக்குளத்தில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அனுமதி

மன்னார் முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பலாலிக்கு இன்று மீண்டும் பறந்தது அமெரிக்க விமானப்படை விமானம்

சிறிலங்காவின் வட பகுதியில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு முக்கியமான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக, அமெரிக்க விமானப்படையின் C-130J  விமானம் இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டது.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர்

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி  இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்  செயலர் அலிசன் ஹூக்கர் இன்று முற்பகல் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்  செயலர் அலிசன் ஹூக்கர் (Allison Hooker) இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பேரிடர் நிவாரண வழங்கலில் என்பிபி அரசியல்வாதிகள் தலையீடு

உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிராமப்புற செயற்பாட்டாளர்களின் கடுமையான தலையீடுகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு  இழப்பீடு வழங்குவதில்  சிக்கல்  ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிராம அதிகாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் சுமித் கொடிகார குற்றம்சாட்டியுள்ளார்.

அவசரகால சட்டத்தால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் முறையிடுங்கள்

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக நம்பும் எவரும் தமது  பிராந்திய  அல்லது தலைமை பணியகத்தில் முறைப்பாடு செய்யலாம் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உதவிப் பொருட்களுடன் வந்திறங்கியது ரஷ்ய விமானம்

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, 35 மெட்ரிக் தொன் எடையுள்ள மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் ரஷ்ய விமானம் ஒன்று சிறிலங்கா வந்துள்ளது.