சல்மான் கான் வீட்டுக்கு முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்தும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ஏற்படக் கூடிய சூழ்நிலைகள் குறித்தும், அனைத்துலக சமூகம் கவலை கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் இறக்குமதி தடை வரும் 15ம் நாள் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த தடையை எதிர்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளதாக, சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.
வரும் வியாழக்கிழமை சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நேற்று தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
அதிபர் தேர்தல் முடிந்தவுடன், வரும் 8ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இந்தவாரம் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்க வானொலியில் செய்யப்பட்ட தரக்குறைவான பரப்புரைக்காக, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மன்னிப்புக் கோரியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொலன்னறுவ, அரலகன்விலவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்ட மேடை மீது இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாவர். இது ஒரு அரிதான சம்பவமாகும். ஏனெனில் இதுவரை சிறிலங்காவில் போட்டியிட்ட அதிபர்களில் ஒருவர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இன்னொருவர் நகரப்புறத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துள்ளனர்.
ஜெனிவாவுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான திலிப் சின்ஹா, ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரது இடத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையிட் அக்பருதீன் நியமிக்கப்படலாம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.