மேலும்

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா – அதிபர் செயலகம் அறிவிப்பு

Major General Crishantha De Silva-maithriசிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க வரும், 21ம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார்.

இதையடுத்தே, சிறிலங்காவின் 21வது இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்

இவருக்கான நியமனக் கடிதம் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கையளிக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா வரும் 22ம் நாள் சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்பார்.

Major General Crishantha De Silva-maithri

இவர், கடைசியாக ரஸ்யாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் துணைத் தூதுவராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த 17ம் நாள், சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.

எனினும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதனை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *