மேலும்

தற்போதைய நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலங்கள் முன்வைக்கப்படாது – பிரதமர் ரணில்

தற்போதைய நாடாளுமன்றத்தில் இனிமேல் எந்த புதிய சட்டமூலமும் முன்வைக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேபாள மீட்பு நடவடிக்கையும், இந்தியா – சீனாவின் மூலோபாய நலன்களும்

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதிகளவில் அழிவு ஏற்பட்டதன் பின்னர்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்குவதற்காக அணுவாயுதப் போட்டியாளர்களான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் விரைந்து சென்றதற்கு, சிக்கலான பூகோள அரசியல் நிர்ப்பந்தங்கள் மற்றும் நடைமுறை நலன்களைக் கொண்டுள்ளமையே காரணமாகும்.

கோத்தாவைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு, சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் கொழும்பு பயணம் கடைசி நேரத்தில் ரத்து

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்து ஐந்து நாள் பயணம், கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கும் தூதுவர் பதவி – நல்லாட்சி அரசிலும் இராணுவத்துக்கு முன்னுரிமை

சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக பதவி வகிக்கும், ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

மே 19இல் மாத்தறையில் நடக்கிறது போர்வீரர்கள் ஞாபகார்த்த அணிவகுப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவு கூரும் வகையில், போர்வீரர்கள் ஞாபகார்த்த அணிவகுப்பு எதிர்வரும் 19ம் நாள் மாத்தறையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் புதன்கிழமை கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்?

சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் புதன்கிழமை (மே 20ம் நாள்) கலைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களுடன் சாதகமான சந்திப்பு – எரிக் சொல்ஹெய்ம் தகவல்

புலம்பெயர் தமிழர்களுடன் தாம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும், இந்தப் பேச்சுக்கள் சாதகமான வகையில் அமைந்திருப்பதாகவும், சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் பயணமாக இன்று சிறிலங்கா வருகிறார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் சிறிலங்காவுக்கு இன்று அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இன்று பிற்பகல் சிறிலங்கா வரும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஐந்து நாட்கள் இங்கு தங்கியிருப்பார்.

நோர்வேயின் முதன்மை 10 வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ்ப் பெண் தெரிவு

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top 10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ஆம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர்.