மேலும்

ஒற்றையாட்சி முறையில் தமிழ்மக்களுக்கு விமோசனம் கிடைக்காது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

ஒற்றையாட்சி முறையினால் தமிழ்மக்களுக்கு விமோசனம் கிடைக்காது என்றும், அது நீக்கப்பட்டு கூட்டாட்சி முறை கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்  வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்.

காங்கேசன்துறையில் அனைத்துலக உறவுகளுக்கான நிலையம் – கட்டுமானப்பணிகளை தொடர அனுமதி

காங்கேசன்துறையில் கட்டப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய அதிபர் மாளிகையின் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள, சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அமைச்சர்கள் பட்டாளத்துடன் இன்று சீனா செல்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் பயணமான இன்று சீனாவுக்குச் செல்லவுள்ளார். இன்றிரவு பீஜிங்கை சென்றடையும் அவருக்கு, நாளை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கெகியாங் ஆகியோர் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

உள்ளூராட்சி சபைகளின் ஆயுள்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு

சிறிலங்காவின் 234 உள்ளூராட்சி சபைகளினது ஆயுள்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீடிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தனுக்கு கிடைக்குமா எதிர்க்கட்சித் தலைவர் பதவி? – சபாநாயகருக்கு முடிவெடுக்கும் அதிகாரம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பாக, சபாநாயகர் சமல் ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் கடன் விதிமுறைகளை மீளாய்வு செய்ய முடியாது – சீனா உறுதி

சிறிலங்காவுடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்பாடுகளின் விதிமுறைகளை மீளாய்வு செய்யத் தயாராக இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

19வது அரசியலமைப்புத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் 19வது அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சீன – சிறிலங்கா அதிபர்கள் பேச்சில் துறைமுக நகர விவகாரத்துக்கு முக்கிய இடம்

சிறிலங்கா அதிபருக்கும், சீன அதிபருக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்து கலந்துரையாடப்படும் என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் சிறப்புத் தூதுவர் லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார்.

ஜெனரல் ஜெயசூரியவுடன் கைகுலுக்க மறுத்த பீல்ட் மார்ஷல் பொன்சேகா

சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுடன், கைகுலுக்க பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மறுப்புத் தெரிவித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சீனாவுடன் சுமுக உறவை விரும்புகிறார் சிறிலங்கா அதிபர் – ஏஎவ்பி ஆய்வு

இவ்வாரம் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் புதிய அதிபர் சீனத் தலைமையைச் சந்தித்து சிறிலங்காவில் தடைப்பட்ட சீனாவின் திட்டங்கள் தொடர்பில் சுமூகமான பேச்சுக்களை நடத்தவுள்ளார்.