மேலும்

பிரிவு: செய்திகள்

ஜோன் கெரியுடன் சிறிலங்காவுக்கு படையெடுக்கும் மூத்த அமெரிக்க அதிகாரிகள்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளும் கொழும்பு வரவுள்ளனர். 

பசிலுடன் அதுரலிய ரத்தன தேரர் ஐந்து மணி நேரம் இரகசியப் பேச்சு

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் நேற்று ஐந்து மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார்.

நாளை காலை சம்பந்தனைச் சந்திக்கிறார் ஜோன் கெரி

இரண்டு நாள் பயணமாக இன்று காலை 7.45 மணியளவிவில் சிறிலங்காவை வந்தடையவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சற்று நேரத்தில் கொழும்பை வந்தடைகிறது ஜோன் கெரியின் விமானம்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். அவர் பயணம் செய்யும் சிறப்பு விமானம் நேற்று  அதிகாலையில் வொசிங்டனில் இருந்து புறப்பட்டது.

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் திறந்துவைப்பு

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்திர் சிலையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை திறந்து வைத்தார்.

சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதத்தில் குதித்தார் சோமவன்ச அமரசிங்க

ஜேவிபியின் முன்னாள் தலைவரும், அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறியவருமான சோமவன்ச அமரசிங்க கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாளை அதிகாலை கொழும்பு வருகிறார் ஜோன் கெரி – கூட்டமைப்பையும் சந்திப்பார்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்காவுக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, நாளை அதிகாலையில் கொழும்பை வந்தடைவார் என்று ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்மக்களின் கோரிக்கை மீது கவனம் செலுத்த வேண்டும் – ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் கருத்து

சிறிலங்கா அதிபர் தனது முதல் 100 நாள் ஆட்சியையும் பூர்த்தியாக்கியுள்ளார். தனக்கு முன்னர் நாட்டை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்சவை விட தனது நிர்வாகத்தை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன 100 நாள் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.

19வது திருத்தத்தை எதிர்த்தவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்துகிறது சுதந்திரக் கட்சி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்காத தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.

போர்க்குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த கடமைப்பட்டுள்ளது அமெரிக்கா – சூசன் ரைஸ்

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில்- இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக விசாரணைக் குழுக்களையும், பொறிமுறைகளையும் உருவாக்குவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளதாக, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.