மேலும்

மாதம்: July 2026

விரைவான, சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைகளை வலியுறுத்துகிறது ஐ.நா

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நீதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதாக குற்றம்சாட்டி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி  நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளது.

14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் மரணம்- பிரேத பரிசோதனையில் உறுதி

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையின் போது கொல்லப்பட்டவர்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளனர் என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பலாலி காணிகள் இராணுவத்திற்கே- விடுவிக்க மறுக்கிறது சிறிலங்கா அரசாங்கம்

பலாலியில் சிறிலங்கா படையினர் வசமுள்ள உயர்பாதுகாப்பு வலயக் காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியாது என, சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர  தெரிவித்துள்ளார்.

அவசரமாக போகம்பறையிலும் மற்றொரு சிறைச்சாலை திறப்பு

கண்டி, பழைய போகம்பறை சிறைச்சாலையை சிறிலங்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நிறுவியுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் இந்திய கைதி மரணம்- உறுதிப்படுத்தியது சிறிலங்கா காவல்துறை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளின் போது, ​​இந்தியரான கைதி ஒருவரும் உயிரிழந்ததாக சிறிலங்கா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிறிலங்காவின்  முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சிறைக்கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று முன்தினமும் நேற்றும் இடம்பெற்ற வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைக் கலவரம்- விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமனம்

நீர்கொழும்பு சிறையில்  இடம்பெற்ற  கலவரம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்கம் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

கிழக்குக் கொள்கலன் முனையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு இல்லை

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை தனியார் துறையிடம் குத்தகைக்கு விடுவது அல்லது ஒப்படைப்பது குறித்து எந்தக் கொள்கை அல்லது நிர்வாக முடிவும் எடுக்கப்படவில்லை என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.