மேலும்

மாதம்: August 2019

சஜித் அணியினரின் புது அழுத்தம் – ஐதேகவுக்கு மற்றொரு நெருக்கடி

வரும் அதிபர் தேர்தலில் ஐதேக அமைக்கவுள்ள கூட்டணியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்க வேண்டும் என, ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் அணியினர்  தற்போது வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சாட்சியம் அளிக்கவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசநாயக்க மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்க (வயது-61) நேற்று மாலை கொழும்பில் காலமானார்.

கோத்தாவின் பாதுகாப்புக்கு யோஷித தலைமையில் தொண்டர் படை

வரும் அதிபர் தேர்தலில் தமது வேட்பாளராக போட்டியில் நிறுத்தவுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அளிக்க, தனியான தொண்டர் படை ஒன்றை உருவாக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.

சஜித் – மைத்திரி புதுக்கூட்டணி? : மறுக்கிறது சுதந்திரக் கட்சி

ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  புதிய கூட்டணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கோத்தாவை எதிர்கொள்வதற்கு அச்சம்

கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் களமிறங்குவது குறித்து ஆளும்கட்சியினர் அச்சம் கொண்டுள்ளனர், அதனாலேயே அவர்கள் மீண்டும் மீண்டும் அவரது இரட்டை குடியுரிமை தொடர்பாக பேசுகின்றனர் என, றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மரணதண்டனையை ஒழிக்கும் பிரேரணை சட்டவிரோதம் – மைத்திரி

மரண தண்டனையை ஒழிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை சட்டரீதியானது அல்ல என்று சட்டமா அதிபர் தமக்கு அறிவித்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு எதிராக மற்றொரு கூட்டணி – ஆனந்தசங்கரி திட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தனது இல்லத்தில் பல்வேறு கட்சிகளுடன் கலந்துரையாடல்களை, நடத்தியுள்ளார் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் கூட்டணி உடன்பாடு – ரணில்

இந்த மாத இறுதிக்குள் ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீண்டும் போட்டியிடுவதா என்று முடிவு செய்யவில்லை – சிறிலங்கா அதிபர்

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு பலர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், போட்டியிடுவதா இல்லையா என்று தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.