மேலும்

இன்று தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சாட்சியம் அளிக்கவுள்ளார்.

இன்று பிற்பகல் 6 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்ப்பதாக, தெரிவுக்குழுவின் தலைவரான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

”அதற்கு முன்னதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளனர்.

கடைசியாக நாங்கள் சிறிலங்கா அதிபரின் சாட்சியத்தைப் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

அதுபற்றி இன்னமும் சிறிலங்கா அதிபருக்கு அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பவில்லை. இன்று தெரிவுக்குழுவில் இதுபற்றி விவாதித்து, அதற்கான நடவடிக்கையை எடுக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *