மேலும்

கோத்தாவை எதிர்கொள்வதற்கு அச்சம்

கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் களமிறங்குவது குறித்து ஆளும்கட்சியினர் அச்சம் கொண்டுள்ளனர், அதனாலேயே அவர்கள் மீண்டும் மீண்டும் அவரது இரட்டை குடியுரிமை தொடர்பாக பேசுகின்றனர் என, றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுக் கொண்டது, அவரது தனிப்பட்ட சில தேவைகளை இலகுபடுத்துவதற்காகவே அன்றி, நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்காக அல்ல.

அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுக் கொண்டதால்,  அவர் நாட்டை நேசிக்கவில்லை என்றும் கூறமுடியாது.

அவர் தனது அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், எதிர்தரப்பினர் மீண்டும் மீண்டும் கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பாகவே பேசுகிறார்கள்.

இதிலிருந்து,  அவர்  தேர்தலில் களமிறங்குவது குறித்து அவர்கள் அச்சமடைந்திருப்பது தெளிவாகின்றது”  என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *