கூட்டமைப்புக்கு எதிராக மற்றொரு கூட்டணி – ஆனந்தசங்கரி திட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தனது இல்லத்தில் பல்வேறு கட்சிகளுடன் கலந்துரையாடல்களை, நடத்தியுள்ளார் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்காக எதையும் இதுவரை செய்யவில்லை என்பதால், ஏனைய தமிழ் கட்சிகள், கூட்டமைப்புக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய கூட்டணி அமைக்கப்படும், என்றும் இதற்கு ஏற்கனவே பல தமிழ் அரசியல் கட்சிகள் ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
பரந்தளவிலான புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குமாறு வடக்கில் உள்ள பல சிவில் அமைப்புகள் தம்மிடம் கோரியுள்ளன என்றும், புதிய கூட்டணி அடுத்த தேர்தலுக்கு முன்னர் உருவாக்கப்படும் என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.