இம்மாத இறுதிக்குள் கூட்டணி உடன்பாடு – ரணில்
இந்த மாத இறுதிக்குள் ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று ஜனநாயக தேசிய முன்னணியின் உடன்பாடு கைச்சாத்திடத் திட்டமிட்டிருந்தது.
ஐதேகவுக்குள் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, இறுதி நேரத்தில் இந்த நிகழ்வு ஒத்திப் போடப்பட்டது.
இந்த நிலையிலேயே, இம்மாத இறுதிக்குள் இந்த உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.