மேலும்

மாதம்: November 2017

எப்படித் தலைமை தாங்க வேண்டும் என்று தலைவர்களுக்கு புத்தர் போதிக்கவில்லை

சிறிலங்காவிற்கு புதியதொரு அரசியலமைப்போ அல்லது தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாற்றமோ செய்யப்பட வேண்டிய தேவையில்லை என மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் அறிக்கையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவில் லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்துக்கு தடை

லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் சிறிலங்காவில் நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இந்த இணைத்தளத்தை சிறிலங்காவில் பார்வையிட முடியாத நிலை காணப்பட்டது.

தமிழர்கள் மீதான சித்திரவதை குற்றச்சாட்டு- விசாரிக்கப்படும் என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவில் தமிழர்கள் மீது தற்போதும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக, வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார செயலர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மோடியை முந்திய டுபாய் ‘லேடி’

டுபாயில் இருந்து “நெவஸ்கா லேடி” என்ற எண்ணெய் தாங்கி கப்பல் 40 ஆயிரம் மெட்றிக் தொன் பெற்றோலுடன், நேற்று மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, இன்று பிற்பகல் 3 மணியளவில், நாடாளுமன்றத்தில அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார்.

எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதாக மைத்திரியிடம் மோடி வாக்குறுதி – கப்பலை அனுப்பினார்

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

பிலியந்தல பேருந்து குண்டுவெடிப்பு – புலிகள் இயக்க சந்தேகநபருக்கு ஆயுள்தண்டனை

பிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்காவுக்கு முதலாவது ரோந்துக் கப்பலை வழங்கியது ஜப்பான்

சிறிலங்காவுக்கு ஜப்பான் வழங்கியுள்ள 30 எம் வகை ரோந்துப் படகு நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவினால் இயக்கி வைக்கப்பட்டது. ரோக்கியோவில் உள்ள சுமிதகாவ கப்பல் கட்டும் தளத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சிறிலங்காவில் தமிழர்கள் மீது தொடரும் சித்திரவதைகள் – அம்பலப்படுத்துகிறது அசோசியேட்டட் பிரஸ்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழர்கள் தாக்கி சித்திரவதை செய்யப்படுவதும், வல்லுறவுக்குட்படுத்தப்படுவதும் தொடர்வதாக, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அபிவிருத்தி, கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு உதவுவதாக ஜப்பான் வாக்குறுதி

சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக ஜப்பான் உறுதியளித்துள்ளது.