தென்கொரியா சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்
மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று காலை தென்கொரியாவைச் சென்றடைந்தார்.
சியோல், இன்சியோன் அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரை, அந்த நாட்டின் உதவி வெளிவிவகார அமைச்சர் சோ ஹுயுன், தேசிய பாதுகாப்புத் தலைவர் சுங் எய்- யொங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
முன்னதாக, நேற்று சியோலைச் சென்றடைந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, மற்றும் அமைச்சர் தயா கமகே, மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் சிறிலங்கா அதிபரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சிறிலங்கா அதிபருடன், அமைச்சர்கள் சரத் அமுனுகம, ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரும் நேற்று சியோல் சென்றடைந்தனர்.
மேலும், அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரம, தலதா அத்துகோரள ஆகியோரும், தென்கொரியாவுக்கு சென்று சிறிலங்கா அதிபரின் குழுவில் இணைந்து கொள்ளவுள்ளனர்.