கூட்டு அரசில் இருந்து விலகினாலேயே சுதந்திரக் கட்சியுடன் இணைய முடியும் – பீரிஸ்
ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டால் மாத்திரமே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவது குறித்து ஆலோசிக்க முடியும் என்று மகிந்த அணியைச் சேர்ந்தவரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜி.எல்.பீரிஸ் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
‘சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.
எனினும், ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டால் மாத்திரமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய முடியும் என்பதே பிரதான நிபந்தனையாக உள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுஜன முன்னணி கட்டுப்பணத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது. அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் நாம் போட்டியிடுவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.