மேலும்

சாவகச்சேகரி நகர சபைத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி

Douglas_Devanandaவடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்புமனுக் கோரப்பட்டுள்ள ஒரே ஒரு சபையான சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

ஈபிடிபி சார்பில் ஐ.சிறிரங்கேஸ்வரன் இன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில் உதவித் தேர்தல் ஆணையாளரிடம் கட்டுப்பணம் செலுத்தி, வேட்பாளர் விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுள்ளார்.

சாவகச்சேரி நகரசபைக்கு  21 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இந்த நிலையிலேயே முதலாவதாக ஈபிடிபி கட்டுப்பணத்தை செலுத்தி, இந்த தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *