மேலும்

மாதம்: May 2017

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை விளக்கமறியலில் வைக்க கம்பகா நீதிமன்றம் உத்தரவு

ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீர் கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை விளக்கமறியலில் வைக்க கம்பகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் மேலும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு- சிறிலங்கா அரசு

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“மன்மோகன்சிங் மறைவு” – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் போலி கீச்சக பதிவால் பரபரப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமாகி விட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட போலி கீச்சகப் பக்கத்தில் பதிவு இடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தனைச் சந்தித்தார் சுவீடன் தூதுவர்

சிறிலங்கா, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா அதிபருடன் அவுஸ்ரேலிய பிரதமர் பேச்சு – ஆட்கடத்தல் தடுப்பு குறித்து முக்கிய கவனம்

அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல்லை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

தலைமறைவாகியுள்ள ஞானசார தேரரை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டை

இனவெறுப்புப் பரப்புரைகளை மேற்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டி வந்த பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு பல காவல்துறைக் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளிகளில் ஒருவரான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன கைது

வெலிவேரிய- ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தன இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்கத் தவறிவிட்டது சிறிலங்கா காவல்துறை – விக்டர் ஐவன்

முஸ்லிம்களின் வணிக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா காவல்துறை தவறி விட்டதாக, மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

பூநகரியில் 6000 ஹெக்ரெயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்

பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

விமான பயணிகள் காவிச் செல்லும் கைப்பை தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகப் பயணம் செய்யும் விமானப் பயணிகள், கைப்பையில் காவிச் செல்லக் கூடிய பொருட்கள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.