வடக்கு, கிழக்கில் மேலும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு- சிறிலங்கா அரசு
வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சிறி்லங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“தற்போதைய கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசம் இருந்த 5000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.” என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.