மேலும்

நாள்: 27th May 2017

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் இறங்கியது இந்தியக் கடற்படை

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகளில் இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது.

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சருடன் முதன்முதலில் பேச்சு நடத்திய இந்தியத் தூதுவர்

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற ரவி கருணாநாயக்கவுக்கு சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து முதன்முதலில் நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்து, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

அரசியலமைப்பு வரைவு கூட்டத்தில் சம்பந்தன்- நிமல் சிறிபால டி சில்வா சூடான வாக்குவாதம்

அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா- அவுஸ்ரேலியா இணக்கம்

கடல்வழி ஆட்கடத்தல் மற்றும் கடல்கொள்ளைக்கு எதிராகச் செயற்படுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவுஸ்ரேலியாவிடம் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் முதல் கப்பல் கொழும்பு வந்தது – மேலும் இரண்டு கப்பல்கள் வருகின்றன

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்களுடன் முதலாவது இந்திய கடற்படைக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

விடுதலைப் புலிகளை அழிக்க ஆலோசனை வழங்கிய கே.பி.எஸ்.கில் மரணம்

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்காவின் முன்னைய சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கிய, இந்தியாவின் பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை பணிப்பாளர் கே.பி.எஸ்.கில் நேற்று காலமானார்.

தேடுதல், மீட்புக்கு உதவுமாறு அனைத்துலக சமூகத்திடம் சிறிலங்கா அவசர கோரிக்கை

பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கு உதவ முன்வருமாறு ஐ.நா, அனைத்துலக தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு மற்றும் அயல்நாடுகளிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெள்ள மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவி கவச வாகனங்கள்

சிறிலங்காவின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிரிஆர் துருப்புக்காவி கவசவாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் சிறிலங்கா

சிறிலங்காவில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இலட்சக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளன.