மேலும்

நாள்: 22nd May 2017

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயரதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் – ரணில், மங்களவுடன் பேச்சு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலர் வில்லியம் பில் ரொட் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்கா அமைச்சரவை மாற்றியமைப்பு – 9 அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் நியமனம்

சிறிலங்கா அமைச்சரவையில்  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை அதிபர் செயலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் ஒன்பது அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் புதிய பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.

விக்னேஸ்வரனின் தாளத்துக்கு ஆடமுடியாது – சரத் பொன்சேகா

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தாளத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் ஆட முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சென்னையில் காவல்துறையின் தடையை மீறி ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

சென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரின் தடையை மீறி நேற்றுமாலை ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இன்று கைது செய்யப்படுகிறார் ஞானசார தேரர்?

சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள்

சிறிலங்காவில் நடந்து முடிந்த முடிந்த குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் எட்டாவது ஆண்டு கடந்த வெள்ளியன்று நிறைவடைந்தது. இந்த யுத்தத்தின் போது காணாமற் போன உறவுகளை இவர்களின் குடும்பத்தவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜேர்மனிக்கான தூதுவராகிறார் கருணாசேன ஹெற்றியாராச்சி

ஜேர்மனிக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்படவுள்ளார். ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே, கருணாசேன ஹெற்றியாராச்சி அந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் சுமேதா போர்க்கப்பல்

இந்திய கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சுமேதா மூன்று நாள்கள் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று காலை அமைச்சரவை மாற்றம் – மங்கள, ரவியின் பதவிகள் பறிப்பு?

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.