மேலும்

நாள்: 24th May 2017

யாழ்ப்பாணம் கேந்திர நகராக அபிவிருத்தி செய்யப்படும் – சம்பிக்க ரணவக்க

எதிர்கால நகரங்கள் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கேந்திர நகராக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கனேடிய கடற்படையின் பசுபிக் தளபதி சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் பேச்சு

கனடாவின் பசுபிக் மரைன் படைப்பிரிவு மற்றும் பசுபிக் கூட்டு அதிரடிப் படைப்பிரிவின் தளபதி றியர் அட்மிரல் ஆர்ட் மக் டொனால்ட் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அவுஸ்ரேலியா சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெராவைச் சென்றடைந்தார்.  

சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் நிதி ஒதுக்கீட்டில் கணிசமான வெட்டு

சிறிலங்கா அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கும், எல்லை கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கும் ஆதரவளிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 2.88 மில்லியன் டொலரை ஒதுங்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரியுள்ளது.

பளை துப்பாக்கிச் சூடு – நாடாளுமன்றில் விபரங்கள் சமர்ப்பிக்கப்படுமாம்

பளை பகுதியில் சிறிலங்கா காவல்துறையின் ரோந்து வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் முடிவுக்கு வந்ததும், அதுபற்றிய விபரங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வித்தியா கொலை வழக்கு யாழ்ப்பாணத்திலேயே விசாரணை – மூன்று நீதிபதிகளும் நியமனம்

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

பெலாரஸ் நாட்டு போர்த்தளபாடங்களை வாங்கும் திட்டம் இல்லை- சிறிலங்கா இராணுவம்

பெலாரஸ் நாட்டில் இருந்து சிறிலங்கா இராணுவம் ஆயுதங்களை வாங்குவதற்கு முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

இனப் பதற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை – அமைச்சரவை முடிவு

இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கு முயற்சி செய்யும் சக்திகளுக்கு எதிராக சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை தீர்மானத்துள்ளது.