சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததை உறுதிப்படுத்தினார் அமைச்சர் சரத் அமுனுகம
இராணுவ நடவடிக்கைகளுக்காக துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுக்கும் சிறிலங்கா அனுமதி அளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.