மேலும்

மாதம்: March 2017

மட்டக்களப்பு சிவில் விமான நிலையம் அடுத்த மாதம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமான நிலையமாக, அடுத்த மாத இறுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

இந்திய- சிறிலங்கா கடற்படைகள் இணைந்து கூட்டு சமுத்திரவியல் ஆய்வு

சிறிலங்காவின் தெற்கு கடல் பகுதியில், இந்திய கடற்படையும், சிறிலங்கா கடற்படையும் இணைந்து, கூட்டு சமுத்திரவியல் ஆய்வை மேற்கொள்ளவுள்ளன.

சிறையில் உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச மருத்துவமனையில் அனுமதி

வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெனிவா தீர்மானத்தை கண்காணிக்க 362,000 டொலர் தேவை – ஐ.நா மதிப்பீடு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, 362,000 டொலர் நிதி தேவைப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தீவுக்காகப் போட்டி போடும் அமெரிக்கா- சீனா

ஆசியாவின் சிறிய நாடுகளில் ஒன்றான சிறிலங்காவில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது இந்திய மாக்கடலின் கேந்திர மையத்தில் அமைந்துள்ளது. சீனாவால் கட்டப்பட்ட இத்துறைமுகத்திற்கு இம்மாதத்தில், இரு வாரங்கள் வரை அமெரிக்க இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர்.

சந்தியா எக்னெலிகொடவுக்கு துணிச்சலான பெண் என்ற விருது வழங்குகிறது அமெரிக்கா

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்கா துணிச்சலான பெண் என்ற அனைத்துலக விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

எந்தவொரு படையினரையும் தண்டிக்கமாட்டோம் – சந்திரிகா

தமது உறவுகள் காணாமல்போக காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு அவர்களின் உறவினர்கள் கோரவில்லை, எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற கேள்விக்கான பதிலையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு ரஷ்யாவின் ஜிபாட் 3.9 போர்க்கப்பல்கள் – இறுதிக்கட்டத்தில் பேச்சுக்கள்

சிறிலங்காவுக்கு ஜிபாட் 3.9 (Gepard 3.9) ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை வழங்குவது தொடர்பான உடன்பாடு குறித்த பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

சீனாவின் நிதி, நிபுணத்துவ உதவியுடன் ஊடகப் பயிற்சி அகடமி

சிறிலங்காவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஊடக பயிற்சி அகடமிக்கு நிதியுதவியையும் நிபுணத்துவ ஆற்றலையும் வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.

வெலிவேரிய துப்பாக்கிச் சூடு – மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெலிவேரிய, ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேர் கொல்லப்படவும், 30 பேர் காயமடையவும் காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.