மேலும்

மாதம்: February 2017

அமெரிக்க மரைன் படைப்பிரிவு பிரதி தளபதி சிறிலங்காவில் – உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் மரைன் படைப்பிரிவின் பிரதிக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் பிரையன் கவனோ, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜெனிவா உரையில் காலஅவகாசம் கோராத சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தருமாறு பகிரங்க கோரிக்கையை விடுக்கவில்லை.

பிரான்ஸ் செனட் உறுப்பினர்கள் சம்பந்தனை சந்திப்பு

பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஜெனிவாவில் இன்று காலஅவகாசம் கோருவார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று உரையாற்றவுள்ளார். இதன்போது, 2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலதிக காலஅவகாசத்தை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் – கூட்டமைப்புக்குள் பிளவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்ததுவதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

“இதயத்தில் இடம்பிடித்த நாடு சிறிலங்கா” – மங்களவிடம் மனம் திறந்த ஐ.நா பொதுச்செயலர்

ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்?

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப்பை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது.

பயிற்சியை முடித்து வெளியேறியது சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவு

சிறிலங்கா கடற்படையின் முதலாவது மரைன் படைப்பிரிவு பற்றாலியன், பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  சிறிலங்கா கடற்படையின் மரைன் படையணியின் அணிவகுப்பை பார்வையிட்டு, அவர்களுக்கான சின்னங்களை இன்று அணிவித்தார்.

சிறிலங்கா அதிபருடன் கூட்டமைப்பு சந்திப்பு – காணிகள் விடுவிப்பு குறித்து பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சிறிலங்கா குறித்த தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இம்முறையும் அமெரிக்காவே ஏனைய இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து முன்வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.