மேலும்

மாதம்: April 2016

வடக்கில் சிறிலங்கா படையினர் புதிதாக காணிகளை சுவீகரிக்கவில்லையாம்

வடக்கில் சிறிலங்கா படையினரால் புதிதாக எந்த காணிகளும் சுவீகரிக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் புதிய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடத் தடை

முல்லைத்தீவு கடலில் ஏற்கனவே மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மட்டுமே, அங்கு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சின் பேச்சாளர் வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் இன்றும் இராணுவ ஆட்சி – சிறிலங்கா அதிபர், பிரதமரிடம் முறையிடவுள்ளார் விக்னேஸ்வரன்

வடக்கில் இடம்பெற்று வரும் இராணுவத்தினரின் காணி அபகரிப்புகள் மற்றும், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து, முறையிடுவதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்.

சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம் – ஒன்பது பேர் இதுவரை கைது

சாவகச்சேரி, மறவன்புலவில் கடந்த மாத இறுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை, ஒன்பது பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

தலைமன்னார்- இராமேஸ்வரம் பாலம் அமைக்கும் திட்டம் – தமக்குத் தெரியாது என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக, இதுவரையில் எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படாத நிலையில், இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாலம் அமைப்பது குறித்து தகவல்களை தெரிவிப்பது அர்த்தமற்றது என்று சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

நவிபிள்ளையை எச்சரித்து விட்டு போரைத் தீவிரப்படுத்திய மகிந்த – கனடாவில் வெளிவந்த உண்மை

தமது நாட்டில் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டும் பாரிய நடவடிக்கையை தாம் முன்னெடுப்பதாகவும், அதற்காகத் தன்னை நான் விமர்சனம் செய்யக் கூடாது என்றும், சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

துறைமுக நகரத் திட்டத்தில் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் – சீனா கூறுகிறது

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில், இன்னமும் தீர்வு காணப்படாத பிரச்சினைகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொருத்து வீடுகள் அமைக்கும் ஒப்பந்தம் மிட்டல் நிறுவனத்துக்கே – சுவாமிநாதன்

வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், இந்தப் பணியை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி திட்டம் ஜூனில் அறிவிப்பு

சிறிலங்காவின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான திட்டம் வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலைமன்னார்- இராமேஸ்வரம் பாலம் குறித்து விரைவில் உடன்பாடு – நிதின் கட்கரி

தலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பாக, இந்தியாவும் சிறிலங்காவில் விரைவில் உடன்பாடு ஒன்றுக்கு வரும் என இந்தியாவின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.