மேலும்

நாள்: 15th April 2016

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் சம்பந்தன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று பிற்பகல் வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் – மறுப்பதற்கு அவசரப்படாத சிறிலங்கா இராணுவம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கையில், கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்துக்கு இந்தியப் போர்க்கப்பல்கள் வருகை

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சி அணியைச் சேர்ந்த இரண்டு போர்க்கப்பல்களும், இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல் ஒன்றும், ஆறு நாள் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.

சிறிலங்காவில் மதிப்புக்கூட்டு வரி 15 வீதமாக அதிகரிக்கிறது

சிறிலங்காவில் மதிப்புக்கூட்டு வரி (வற் வரி) அடுத்த மாதம் 02ஆம் நாள் தொடக்கம் 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதி அமைச்சு இன்று இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பீஜிங்கில் விரிக்கப்பட்ட செங்கம்பளம், கொழும்புத் துறைமுகத்தில் புளூ ரிட்ஜ்

அமெரிக்க அதிகாரிகள் பலர் தொடர்ச்சியாக சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குப் பயணம் செய்ததானது முன்னர் முக்கியத்துவம் இல்லாத இலங்கைத் தீவு மீது அமெரிக்கா தற்போது அதிக ஆர்வம் கொண்டுள்ளதைச் சுட்டிநிற்கிறது.

சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் இரகசியப் பேச்சுக்குச் தயாராகிறார் பசில்

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

பசுபிக் தீவில் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி அளிக்கிறது அமெரிக்கா

சிறிலங்கா கடற்படையினருக்கு, வடமேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில், அமெரிக்க கடற்படையினர் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

சிறிலங்கா இராணுவம் வசமுள்ள காணிகளை ஒப்படைக்க வலியுறுத்துகிறது பிரித்தானியா

வடக்கில் சிறிலங்கா படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை சிறிலங்கா அரசாங்கம் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.