மேலும்

நாள்: 21st April 2016

தாஜுதீன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளருக்கு விளக்கமறியல்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா காவல்துறை ஆய்வாளரை, மே 5ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவிடம் போர்க்கப்பலை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம்

ரஸ்யாவிடம் இருந்து ஜிபாட் வகை போர்க்கப்பல்களை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம் காட்டுவதாக ரஸ்ய ஊடகமான ஸ்புட்னிக்  செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்கா மீதான கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதி தடையை நீக்குவதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்த தடையை நீக்குவதற்கு, நீண்ட கலந்துரையாடல்களின் இறுதியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்திய சார்பு ரணில் அரசுடன் சீனா எப்படி நெருங்கியது? – இந்திய ஊடகம்

சிறிலங்கா பிரதமரின் சீனாவிற்கான பயணத்தின் இறுதியில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது மகிந்த ஆட்சிக்காலத்தில் இருந்த நிலைக்கு மீளத் திரும்பிவிட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பூர் அனல் மின் திட்டம் குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு கோரவில்லை – சிறிலங்கா அரசாங்கம்

சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சம்பூர் அனல்மின் நிலையப் பணிகள் இந்த ஆண்டு ஆரம்பம்- சிறிலங்கா அரசு உறுதி

சம்பூரில் அனல் மின்நிலையத்தின் மூன்று கட்ட நிர்மாணப் பணிகளும் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலான புதிய சட்டம் இன்னும் வலுவானதாக இருக்குமாம்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, இன்னும் கூடுதல் வலுவான சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் முடிவு  செய்திருப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

யோசித குறித்த சிறிலங்கா கடற்படையின் நிலைப்பாடு – விரைவில் அறிவிப்பு

லெப்.யோசித ராஜபக்சவின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பான சிறிலங்கா கடற்படையின் நிலைப்பாடு தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதிகள் – மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லையாம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ரவிச்சந்திரன் ஆகிய  7 பேரின் விடுதலை தொடர்பாக, இந்திய மத்திய அரசு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.