மேலும்

நாள்: 1st April 2016

அமெரிக்க போர்க்குற்ற விவகார நிபுணர் வடக்கு ஆளுனர், பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் இன்று மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் வட மாகாண ஆளுனர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

உறவுகளை வலுப்படுத்துவதற்கு ரணிலின் வருகைக்காக காத்திருக்கும் சீனா

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணத்தை, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

வடக்கில் படைக்குறைப்பு நடவடிக்கை பாதிக்கப்படாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சாவகச்சேரியில் தற்கொலை தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள்  கைப்பற்றப்பட்ட சம்பவத்தினால், வடக்கில் இருந்து படைகளைக் குறைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

காணாமற்போனவர்களில் மூவர் மாலைதீவு சிறையில் – பரணகம ஆணைக்குழு கண்டுபிடிப்பு

காணாமற்போனவர்களில் நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் மாலைதீவு சிறைச்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டை செய்யுமாறு சிறிலங்காவுக்கு மூன்று நாடுகள் அழுத்தம்

இந்தியாவுடன், சிறிலங்கா பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்வதையிட்டு ஜப்பான், சீனா, தென்கொரியா போன்ற நாடுகள், அக்கறை கொண்டுள்ளதாக சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்க நிபுணர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சாவகச்சேரி வெடிபொருட்கள் – இனவாதிகளே கூச்சலிடுகின்றனர் என்கிறார் வடக்கு ஆளுனர்

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இனவாதிகளே கூச்சலிடுவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே.

விசாரணையில் இறங்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவு?

சாவகச்சேரி – மறவன்புலவில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

சாவகச்சேரி வெடிபொருட்களுடன் இராணுவச் சிப்பாய்க்குத் தொடர்பா?

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டை, சந்தேக நபரான ரமேஸ் எனப்படும், எட்வேர்ட் ஜூலியனுக்கு, பெற்றுக் கொடுத்தவர், சி்றிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரின் சகோதரரே, என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.