சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி திட்டம் ஜூனில் அறிவிப்பு
சிறிலங்காவின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான திட்டம் வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் ஜப்பானில் நடக்கவுள்ள, அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டில் இருந்து சிறிலங்கா அதிபர் நாடு திரும்பிய பின்னர், சிறிலங்காவின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி தொடர்பான திட்டம் அறிவிக்கப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.