மின்மாற்றிகள் வெடிப்பு குறித்து விசாரிக்க நாளை வருகிறது ஜேர்மனி நிபுணர் குழு
பியகம மற்றும் கொட்டகொட உபமின் நிலையங்களில் வழமைக்கு மாறான முறையில்- இரண்டு மின் மாற்றிகள் வெடித்தமை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜேர்மனியில் இருந்து நிபுணர்கள் குழுவொன்று நாளை சிறிலங்கா வரவுள்ளது.
இந்த மின்மாற்றிகள் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டவை என்றும், எனவே இந்த வழமைக்கு மாறான வெடிப்புகள் தொடர்பாக, ஜேர்மனி நிபுணர்கள் குழு விசாரிக்கவுள்ளதாகவும், மின்சக்தி அமைச்சின் செயலர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.
மின்மாற்றிகள் வெடிக்காது என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர். நிபுணர் குழுவினர் இங்கு வந்து பார்வையிட்டு, இது தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்ட வெடிப்பா அல்லது நாசவேலையா என்று ஆராயவுள்ளனர்.
இரண்டு மின்மாற்றிகளும் ஒரே விதமாக வெடித்ததில், சிறிலங்காவில் பரவலாக மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.