முஸ்லிம் காங்கிரசின் பாலமுனை மாநாட்டில் மைத்திரி, ரணில், சம்பந்தன்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19ஆவது தேசிய மாநாடு நேற்று அம்பாறை- பாலமுனையில் இடம்பெற்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டில், சிறிலங்கா அதிபரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைபை்பின் தலைவருமான இரா.சம்பந்தன், அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், அமைச்சர் திகாம்பரம் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலர் ஹசன் அலி பங்கேற்காமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.