மேலும்

மீண்டும் மின்தடை ஏற்பட்டால் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவேன் – ரணில் எச்சரிக்கை

Ranilநாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் இன்னொரு மின்சாரத் தடை ஏற்படுமானால்,  பல உயர் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்றுச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஏற்பட்ட மின்சாரத் தடைகளுக்கு மின்சார சபை உயர் அதிகாரிகளின் சதியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலேயே சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அதேவேளை மின்சாரத் தடைக்கான காரணங்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளில், மின்சாரத் தடைக்கு சதித் திட்டங்களே காரணம் என்று கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே, நுரைச்சோலை அனல் மின் நிலையச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பத் தொட்ங்கியுள்ளதால், இன்றுடன் மின்வெட்டுப் பிரச்சி்னை தீரும் என்று மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *