மேலும்

மாதம்: September 2015

முழு உலகினதும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளாராம் மைத்திரி – பான் கீ மூன் பாராட்டு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முழு உலகத்தினதும் நம்பிக்கையை வென்றிருப்பதாகவும், அவரது செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

உள்ளகப் பொறிமுறையிலேயே விசாரணை – வெளிநாட்டு தலையீடு இருக்காது என்கிறார் ரணில்

மூன்று சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணையே நடத்தப்படும் என்றும், அனைத்துலக விசாரணை நடத்தப்படவுள்ளதாக பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க அவுஸ்ரேலியா முடிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப் போவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

இந்திய- சிறிலங்கா படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா படைகள் நடத்தும், மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நாளை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகருக்கு அண்மையில் உள்ள   அவுண்ட் இராணுவத் தளத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அனைத்துலக விசாரணைப் பொறிமுறை சிறிலங்காவுக்கு புதியதல்ல – ‘தி ஹிந்து’

சிறிலங்காவுக்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறை என்பது புதியதல்ல என தி ஹிந்து  ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றில் அனைத்துலக நீதிபதிகளின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலரை சந்தித்தார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு ஐ.நா பொது அமர்வுக்குப் புறம்பாக நேற்றைய தினம் இடம்பெற்றது.

சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சரைச் சந்திக்கிறது யாழ். மீனவர்கள் குழு

சிறிலங்கா மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையில் அண்மைய காலங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்குத் தீர்வு காணும் முயற்சியாக சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சரை யாழ்ப்பாண மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நாளை சந்திக்கவுள்ளனர்.

சிறிலங்காவின் நீதித்துறை மீது ஐ.நா மனித உரிமை ஆணையம் நம்பிக்கை கொள்ளாதது ஏன்?

நாட்டின் நீதிமுறைமையில் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கான மிகப் பாரிய செயற்பாட்டை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.  இவ்வாறானதொரு சூழல் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்திலும் ஏற்பட்டது.

ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம்- சிறிலங்கா வாக்குறுதி

ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பரிந்துரைகளை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்தவுள்ளதாக  சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.