மேலும்

நாள்: 25th September 2015

சிறிலங்கா போரின் மீது புதிய விசாரணைகளைத் தூண்டும் ஐ.நா அறிக்கை – பாகம் 1

மல்லராஜன் றஜீபா மற்றும் அவரது தம்பியான கானகன் ஆகியோர் மே 15 அன்று பதுங்குகுழியில் தஞ்சமடைந்திருந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் முறையே  பத்து மற்றும் ஏழு வயதாகும். இவர்களது பெற்றோர்கள், நான்கு சகோதரர்கள் ஆகியோர் எறிகணை வீச்சின் போது பதுங்குகுழியில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

ஜெனிவா தீர்மானம் நம்பகமான இடைக்கால நீதிச் செயற்பாட்டின் முக்கியமான படிநிலை – ஜோன் கெரி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைத்துள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு, நம்பகமான இடைக்கால நீதிச் செயற்பாட்டின் முக்கியமான படிநிலை என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைக்கு சிறிலங்கா இணக்கம் – தீர்மானத்துக்கும் இணை அனுசரணை

கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு தரப்புகளின் ஆதரவுடன் உள்நாட்டு விசாரணையை நடத்த வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கியமான நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைவு- முழுமையாக

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைதகள் பேரவையில், அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இணைந்து புதிய- திருத்தப்பட்ட- தீர்மான வரைவை நேற்றுமாலை சமர்ப்பித்துள்ளன.

அனைத்துலக தலையீடு இல்லாத விசாரணையை ஏற்கோம் – அமெரிக்காவிடம் சுமந்திரன் தெரிவிப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணை அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அமெரிக்கத் தீர்மானம் உள்ளடக்கத் தவறினால், அதற்கு தாம் ஒத்துழைக்கமாட்டோம் என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவை வரவேற்கிறது கூட்டமைப்பு

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன்,  நம்பகமான நீதிப் பொறிமுறையை உருவாக்க வலியுறுத்தும் வகையில், ஜெனிவாவில் நேற்று அமெரிக்கா சமர்ப்பித்துள்ள புதிய திருத்த வரைவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

வெளிநாட்டு, கொமன்வெல்த் நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை – தீர்மான வரைவில் மாற்றம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன், கூடிய நீதி விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் திருத்தப்பட்ட தீர்மான வரைவை அமெரிக்கா முன்வைத்துள்ளது.