மேலும்

நாள்: 18th September 2015

கலப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு ரணிலைக் கோரும் உரிமை எவருக்கும் இல்லை – விக்கிரமபாகு

கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை நிராகரித்துள்ள புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும்படி ரணில் விக்கிரமசிங்கவைக் கோரும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் வலிமிக்கது, ஆனால் அவசியமானது – ஐ.நா சிறப்பு ஆலோசகர்கள்

மோதல் காலங்களில் எல்லா சமூகங்களுக்கும் பாரிய துன்பங்களை விளைவித்த  இருண்ட காலத்தை சிறிலங்கா கடந்து வந்திருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா பொதுச்செயலர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வரவேற்றுள்ளார்.

இந்தியாவால் மட்டுமே சிறிலங்காவை காப்பாற்ற முடியும் – கேணல் ஹரிகரன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி சிறிலங்காவுக்குத் தேவைப்படுகிறது.

சிறிலங்காவுடனான இராணுவப் பயிற்சியில் மறைமுக நிகழ்ச்சி நிரல் இல்லை – என்கிறது சீனா

சீன- சிறிலங்கா படைகளுக்கு இடையிலான பயிற்சித் திட்டங்களில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேணல் லி செங்லின் தெரிவித்துள்ளார்.

கலப்பு நீதிமன்றம் குறித்து ஜனவரியிலேயே தீர்மானம் – மங்கள சமரவீர

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் முன்மொழிந்துள்ள கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பான வரும் ஜனவரி மாதமே முடிவு செய்யப்படும் என்று  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணையே நியாயம் தரும் – 170 கத்தோலிக்க குருமார் ஐ.நாவுக்கு கடிதம்

அனைத்துலக விசாரணை மட்டுமே, சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என்று, வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க குருமார்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரிடம் ஆறு மணிநேரம் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரிகேடியர் அருண வன்னியாராச்சியிடம் ஆறு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் அடுத்தவாரம் சிறிலங்கா குறித்த தீர்மானம்

சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் முன்வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.