இந்திய- சிறிலங்கா படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்
இந்திய- சிறிலங்கா படைகள் நடத்தும், மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சி நாளை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகருக்கு அண்மையில் உள்ள அவுண்ட் இராணுவத் தளத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்த 14 நாள் போர்ப் பயிற்சி நடத்தப்படவுள்ளது.
இது, இந்திய- சிறிலங்கா படைகள், பங்கேற்கின்ற மூன்றாவது கூட்டுப் பயிற்சியாகும்.
இந்தப் போர்ப் பயிற்சியின் இறுதி தந்திரோபாய பயிற்சிகள் ஒக்ரோபர் 10ஆம், 11ஆம்.நாள்களில் அவுண்ட் இராணுவத் தளத்தில் இடம்பெறும்.
இதில், இரு நாடுகளினதும் மூத்த இராணுவ அதிகாரிகள் பார்வையாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக் கூட்டுப் பயிற்சி, இந்தப் பிராந்தியத்தில் அமைதி, செழுமை மற்றும் உறுதிப்பாட்டுக்கான முக்கியமான நகர்வு ஒன்று புதுடெல்லி தெரிவித்துள்ளது.