மேலும்

நாள்: 16th September 2015

போர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை ஏற்க முடியாது – சிறிலங்கா அமைச்சர்

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையை வரவேற்கிறது பிரித்தானியா

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வரவேற்றுள்ள பிரித்தானியா, இந்த அறிக்கையின் பரிந்துரைகளை உன்னிப்பாக ஆராயப் போவதாக தெரிவித்துள்ளது.

ஐ.நா விசாரணை அறிக்கையின் சுருக்கம் – முழுமையாக

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கை இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அறிக்கையின் சுருக்கம், ஆங்கிலத்தில் 19 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது பகுதி 261 பக்கங்களில் உள்ளது.

போர்க்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம்- ஐ.நா பரிந்துரை

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துக: நாடுகடந்த தமிழீழ அரசவையில் தீர்மானம்

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது அதனையொத்த அனைத்துலக நீதி பரிபாலனத்திற்கோ பாரப்படுத்த, ஐ.நா பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரை செய்யும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம்  கோரும் தீர்மானம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.நா விசாரணை அறிக்கை இன்று வெளியாகிறது

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.

தலைமன்னார்- இராமேஸ்வரம் தரைப்பாலம் குறித்து ரணிலுடன் இந்திய அமைச்சர் பேச்சு

தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைப்பது தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர முயற்சிக்கிறாராம் ரணில்- இந்தியாவிடம் வாக்குறுதி

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் இழைத்த சிறிலங்கா படையினரைப் பாதுகாக்க சட்டவிலக்குரிமைச் சட்டம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இன்று வெளியிடவுள்ள அறிக்கையில், சிறிலங்காப் படையினர் மீது குற்றம்சுமத்தப்பட்டால், அவர்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிலக்குரிமை கோரும் சட்டப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாக அறிவித்துள்ளார் உதய கம்மன்பில.

சிறிலங்காவில் நம்பகமான நீதிச் செயல்முறைகள் தேவை – அமெரிக்கா வலியுறுத்தல்

சிறிலங்காவில் போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக, தீர்வு காண்பதற்கு நம்பகமான நீதிச் செயல்முறைகள் தேவை என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.