மேலும்

நாள்: 19th September 2015

சிறிலங்காவில் அனைத்துலக பங்களிப்புடன் உள்நாட்டு விசாரணை – அமெரிக்கா வலியுறுத்துகிறது

சிறிலங்காவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு, அனைத்துலக சமூகத்தின் கணிசமான பங்களிப்புடன், உள்நாட்டு விசாரணை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை விட்டுக் கொடுக்குமா சீனா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சிறிலங்காவில் சீனப் பயணிகளால் முகங்கொடுக்கப்படும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு இந்த அறிக்கையை சீனா வெளியிட்டதா அல்லது சிறிலங்காத் தீவின் அரசியற் சூழலை மதிப்பீடு செய்வதற்காக இது வெளியிடப்பட்டதா என்பது ஆராயப்பட வேண்டும்.

அமெரிக்க தீர்மான வரைவு வெளியானது – கலப்பு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் முதல் வரைவு ஆவணம் வெளியாகியுள்ளது.

சுவிசில் இன்று ‘கி.பி.அரவிந்தன்- ஒரு கனவின் மீதி’ நூல் அறிமுக நிகழ்வு

ஈழப் போராட்ட முன்னோடியும், கவிஞரும், எழுத்தாளரும், ஊடகவியலாளருமான கி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான ‘கி.பி.அரவிந்தன் – ஒரு கனவின் மீதி’ அறிமுக நிகழ்வு இன்று சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரில் நடைபெறவுள்ளது.

கலப்பு நீதிமன்றத்துக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – ‘நியூயோர்க் ரைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு போர்க் குற்றங்களை உள்ளடக்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கடந்த புதனன்று வெளியிட்டது. 2009ல் முடிவடைந்த இந்த உள்நாட்டு யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.