மேலும்

நாள்: 3rd September 2015

அமைச்சர்கள் தொகை அதிகரிப்புக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

சிறிலங்காவில் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 127 மேலதிக வாக்குகளால்,நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சந்திரிகா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இன்று சந்தித்தார். புதுடெல்லியில் இன்று ஆரம்பமான அனைத்துலக இந்து- பௌத்த மாநாட்டின் போதே,  இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்கா கடற்படையுடன் அவுஸ்ரேலிய போர்க்கப்பல் கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா கடற்படையின் போர்க்கப்பல்களுடன் இணைந்து அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று, கொழும்பில் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

முதல் உரையிலேயே அரசாங்கத்தை சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று நியமிக்கப்பட்ட இரா.சம்பந்தன், தனது முதல் உரையிலேயே,  அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

கோத்தா, துமிந்த மற்றும் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளிடம் 3 மணிநேரம் விசாரணை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவினால், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று 3 மணிநேரம் விசாரிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் – சபாநாயகர் அறிவிப்பு

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய சற்று முன்னர் இதனை சபையில் அறிவித்துள்ளார்.

சீனாவை சிறிலங்காவிடம் இருந்து ஓரம்கட்ட முடியுமா?

இந்தியா தனது நலன்களை பராமரித்துக் கொள்வதுடன் கொழும்புடன் தொடர்ந்தும் உறவைப் பேணுவதையும் இதன் மீது தான் செல்வாக்குச் செலுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் அதேவேளையில், சீனாவிடமிருந்து சிறிலங்காவை ஓரங்கட்டுவதில் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த ஒரே நாடு சிறிலங்கா – மேஜர் ஜெனரல் உதய பெரேரா

எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த அனுபவத்தைக் கொண்ட ஒரே நாடாக சிறிலங்கா விளங்குவதாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி- ஆதரவாகவும் எதிராகவும் வாதப்பிரதிவாதங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், வழங்கப்படக் கூடாது என்றும்  பரவலான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? – இன்று முடிவு அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், புதிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிடவுள்ளார்.