மேலும்

Archives

யதார்த்தத்தை புரிந்து செயற்படுங்கள் – வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு புதுடெல்லியில் அறிவுரை

வடக்கு மாகாணசபை யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும் என்று புதுடெல்லியில் நடத்தப்பட்ட, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான வலுவூட்டல் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் குடும்பத்தினரை வெறும் கையுடன் திருப்பி அனுப்பினார் சிறிலங்கா அதிபர்

சட்டமா அதிபரும், நீதி அமைச்சரும் வெளிநாடு சென்றிருப்பதால், அடுத்தவாரம் நாடு திரும்பிய பின்னர், அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதாகக் கூறி, அரசியல் கைதிகளின் குடும்பத்தினரையும், தமிழ் அரசியல்பிரமுகர்களையும் சிறிலங்கா அதிபர் வெறும் கையுடன் திருப்பி அனுப்பியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தோனேசியப் போர்க்கப்பல்

இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக பலநோக்குப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது.

மக்களை தவறாக வழிநடத்த முயற்சி – ஊடகங்கள் மீது சிறிலங்கா பிரதமர் பாய்ச்சல்

புதிய அரசியலமைப்புக்கு அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக, ஊடகங்கள் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவில் சிறப்பு வசதிகளைக் கொண்ட முதல் சிறைச்சாலை

கைதிகளுக்கான சிறப்பு வசதிகளைக் கொண்ட- அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப கட்டப்பட்ட சிறிலங்காவின் முதல் சிறைச்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் காட்சிக்காக இந்திய இராணுவத்தின் ஆயுதங்கள்

புனேயில் நடைபெறும் இந்திய – சிறிலங்கா இராணுவத்தினர் பங்கேற்கும், ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சியில், இந்திய இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள ஆயுதங்கள், சிறிலங்கா படையினருக்காக காட்சிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்ட பேச்சில் சுமந்திரனும் பங்கேற்பு

மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் இடம்பெற்றன.

சிறிலங்கா அதிபருக்கு யாழ்ப்பாணத்தில் கருப்புக் கொடியுடன் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் வந்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிறிலங்கா படைத் தளபதிகளுடன் அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின்  தெற்கு மற்றும் தெற்கிழக்காசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர், கேணல் ஜோசப் பெல்டர், சிறிலங்காவின் பாதுகாப்பு உயர்மட்டத்தினருடன் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.