மேலும்

Archives

ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டு பெரும் பிரச்சினையாக மாறலாம் – ஐ.நா அறிக்கையாளர் எச்சரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு, மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கக் கூடும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு தழுவிய கையெழுத்து திரட்டும் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குதிப்பு

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடன் நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும், வடக்கு- கிழக்கு தழுவிய ரீதியிலான கையெழுத்துத் திரட்டும் போராட்டம் ஒன்றை பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றம் முன் கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐஎஸ் அமைப்பில் சிறிலங்கா மருத்துவர்கள் – திடுக்கிடும் காணொளி

ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தேசம் தீவிரவாதிகளுடன் இணைந்து சிறிலங்காவைச் சேர்ந்த மருத்துவர்களும் பணியாற்றுவதாக, ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் மரணம் – யாழ். நகரில் அதிரடிப்படை குவிப்பு

யாழ். அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு மரணமானார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நிலைமாறும் உலகில் புலம்பெயர் தமிழர்கள் : பாகம்-1

உலகம் எங்கும் பரந்து வாழும் சமுதாயம் என்பதில் பெருமை கொண்டு வாழ்வது,  தமிழ் சமுதாயம் ஆகும்.  உள்நாட்டு யுத்தத்தால் ஈழத்தமிழர்கள் நாடுகள் பல கடந்து வாழ்கின்றனர். ஆனால், பல பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து வேலையாட்களாகவும் போர் வீரர்களாகவும் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்று அந்தந்த நாடுகளிலேயே தேசியம் பேசும் சுதேசிகளாக மாறி வாழ்கின்றனர்.

சிறிலங்காவின் உண்மை கண்டறியும் செயல்முறைகளில் வேகமில்லை – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

சிறிலங்காவில் உண்மை கண்டறியும் செயல்முறைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கான, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா வழங்கிய ரோந்துக் கப்பல் சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைப்பு

சிறிலங்காவுக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் நேற்று சிறிலங்கா கடலோரக் காவல் படையில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது.

இந்திய சரக்குக் கப்பல் காலி அருகே கடலில் மூழ்கியது – 7 மாலுமிகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற சிறிய சரக்குக் கப்பல் காலிக்கு அப்பால் உள்ள கடலில் மூழ்கியது. இதில் இருந்த 7 இந்திய மாலுமிகளும் சிறிலங்கா கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.

நீதி வழங்கும் செயற்பாடுகளை அரசியல்மயப்படுத்தக் கூடாது – ஐ.நா நிபுணர் எச்சரிக்கை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான செயற்பாடுகள், அரசியல் மயப்படுத்தப்பட்டால், நிலைமாறு கால நீதி செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட்டு விடும் என்று உண்மை, நீதி, இழப்பீடு மற்றும்  மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எச்சரித்துள்ளார்.