மேலும்

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

pablo de- msசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா அதிபருடன், அவரது செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ மற்றும், வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

pablo de- ms

இந்தச் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கிற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் நடத்திய சந்திப்புகளின் போது அறிந்து கொண்ட விடயங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபருடன், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கலந்துரையாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *