மேலும்

Tag Archives: மைத்திரிபால சிறிசேன

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – நள்ளிரவில் வெளியாகிறது வர்த்தமானி அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவை மைத்திரி சந்திக்கவில்லை – அதிபர் செயலகம் அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு பேச்சுக்களை நடத்தியதாக வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபர் செயலகம் மறுத்துள்ளது.

மைத்திரி – மகிந்த நேற்றிரவு சந்திப்பு – ஒன்றரை மணிநேரம் பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் நள்ளிரவு கலைக்கப்படவில்லை – ஊடகங்கள் ஏமாற்றம்

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மைத்திரி அரசிடம் வடக்கு மக்கள் எழுப்பும் கேள்வி

கஸ்தூரி உதயகுமாரியின் குடும்பத்தினர் 1990ல் தெல்லிப்பளையிலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். யாழ்ப்பாண நகரிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தெல்லிப்பளை 1990ல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. இராணுவ ஆக்கிரமிப்பின் முன்னர் அந்தக் கிராமம் மிகவும் அமைதி நிறைந்ததாகக் காணப்பட்டது.

சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கத்தை அமைக்க முடியாது – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா சுதந்திர கட்சியினாலோ அல்லது வேறு எந்த கட்சியினாலோ, சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கத்தை அமைத்துவிட முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மைத்திரி வழங்க முன்வந்த கௌரவப் பதவியை நிராகரித்தார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்க முன்வந்த கெரளவப் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்தவை எப்படி பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும்? – மைத்திரி கேள்வி

மோசமான – ஊழல் ஆட்சியை நடத்தியதால் மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை, எவ்வாறு எமது பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகிந்த போட்டியிட முடியாது – மைத்திரி அறிவித்து விட்டதாக உறுதிப்படுத்தினார் ராஜித சேனாரத்ன

நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாக, அமைச்சரவை பேச்சாளரான, ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மகிந்தவுக்கு இடமளிக்க முடியாது – மைத்திரி திட்டவட்டமாகத் தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.