மகிந்த போட்டியிட முடியாது – மைத்திரி அறிவித்து விட்டதாக உறுதிப்படுத்தினார் ராஜித சேனாரத்ன
நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாக, அமைச்சரவை பேச்சாளரான, ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு தேசியப்பட்டியலும் இடம் வழங்கப்படாது என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்து விட்டார்.
அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்று எவரும் நிறுத்தப்படுவதில்லை.” என்றும் தெரிவித்தார்.