மகிந்தவை மைத்திரி சந்திக்கவில்லை – அதிபர் செயலகம் அறிவிப்பு
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு பேச்சுக்களை நடத்தியதாக வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபர் செயலகம் மறுத்துள்ளது.
சபாநாயகரின் இல்லத்தில் மகிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றதாகவும், சுமார் ஒன்றரை மணிநேரம் இருவரும் பேச்சு நடத்தியதாகவும் கொழும்பு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் அத்தகைய பேச்சுக்கள் ஏதும் நடத்தப்படவில்லை என்று அதிபர் செயலக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.