மேலும்

மைத்திரி – மகிந்த நேற்றிரவு சந்திப்பு – ஒன்றரை மணிநேரம் பேச்சு

maithripala-mahindaசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுவான ஒரு இடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மைத்திரிபால சிறிசேனவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு பேர கொண்ட குழு முன்னதாக நேற்று மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தது.

இந்தப் பேச்சுக்களை அடுத்தே, நேற்றிரவு இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *