சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – நள்ளிரவில் வெளியாகிறது வர்த்தமானி அறிவிப்பு
சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அச்சிடுவதற்காக, தமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க அச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.இந்த நிலையில், அரசாங்க அச்சகப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்ற நள்ளிரவு வெளியாகும் சிறப்பு வர்த்தமானியில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.