மேலும்

வாக்களிப்பின் போது தேர்தல் விதிமுறையை மீறிய மகிந்த குடும்பம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்கச் சென்றிருந்த போது, தேர்தல் ஆணையாளரின் உத்தரவை மீறி, ஒளிப்படம் எடுத்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வடமராட்சியில் வாக்களிப்பு நிலையம் அருகே கைக்குண்டு வீச்சு – மக்களை அச்சுறுத்த முயற்சி

வடமராட்சியில் வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில், சிறிலங்காப் படையினர் எனக் கருதப்படுவோரால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடக்கிறது வாக்களிப்பு – மகிந்தவும் வாக்களித்தார்

சிறிலங்காவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்ற 5 தமிழர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அகதிகளாக தமிழ்நாட்டைச் வந்தடைந்த ஐந்து இலங்கைத் தமிழர்களுக்குஉள்ளூர் நீதிமன்றத்தினால் தலா இரண்டு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமான தேர்தலை நடத்துமாறு மகிந்தவிடம் வலியுறுத்தினார் ஜோன் கெரி

சிறிலங்காவில் இன்று அதிபர் தேர்தல் வன்முறைகளோ, அச்சுறுத்தல்களோ இன்றி, சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வலியுறுத்தியுள்ளார்.

பசில் ராஜபக்சவுடன் தொடர்பா? – நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மறுப்பு

சிறிலங்கா அரசாங்கம், தன்னுடன் தொடர்புகளை வைத்திருப்பதாக, எதிரணியினர் கூறிய குற்றச்சாட்டை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. ருத்திரகுமாரன் மறுத்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் – பரபரப்பான சூழலில் இன்று பலப்பரீட்சை

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது.

சொந்தப் பேனாவினால் புள்ளடியிட்டால் வாக்கு நிராகரிக்கப்படும் – தேர்தல் ஆணையாளர்

வாக்களிப்பு நிலையத்தில் வழங்கப்படும் பேனாவினால் புள்ளடியிடப்படாத வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தெரியாத தேவதையா – தெரிந்த பிசாசா? : ஈழத்தமிழ் மக்கள் தமது வாக்குகளை யாருக்கு வழங்குவார்கள்?

யாழ்ப்பாணம், கிளிநொச்சி,  முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தில் தற்போது ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஜனவரி 08 அன்று இடம்பெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் சிறுபான்மைத் தமிழ் மக்களினதும் முஸ்லீம் மக்களினதும் வாக்குகள் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய நிலையில் காணப்படுகிறது.

எமக்கு புத்திகூற வேண்டாம் – ஐ.நா பேச்சாளர் மீது பாய்கிறது சிறிலங்கா

சிறிலங்கா அதிபர் தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் கருத்தை அவரது பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது.